Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 27, 2012

    ஆசிரியர் தகுதித் தேர்வு! TET: தமிழ் வினா - விடை!

    கடந்த மூன்று வாரங்களாக நாளிதழ்களிலும் நூல் விற்பனை நிலையங்களிலும் வெகுவாகப் பேசப்படுவது ஆசிரியர் தகுதித் தேர்வு. ஓராண்டு, இரண்டாண்டு எனப் பணிப் பயிற்சி பெற்று ஆசிரியர் பட்டய, பட்டச் சான்றுகள் எல்லாம் முழுமையான பயனைத் தராது ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு. பணிக் கல்வி பெற்ற பின்னரும் மீண்டும் தகுதித் தேர்வினை எழுதி 60% மதிப்பெண் வாங்க வேண்டிய கட்டாய நிலை. அவர்களுக்காகவே தமிழ் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கி வருகிறோம். படித்து பயன் பெறுங்கள்.

    *  சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
    *  அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
    *  சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
    *  கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
    *  மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
    *  மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
    *  மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
    *  கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
    *  மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
    *  திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
    *  தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
    *  தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
    *  திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
    *  குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
    *  குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16
    *  நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
    *  மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
    *  வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
    *  வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
    *  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
    *  ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
    *  திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
    *  அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
    *  திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
    *  முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
    *  ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
    *  திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
    *  கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
    *  இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
    *  வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
    *  வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
    *  வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
    *  சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
    *  நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
    *  வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி -  ஒரு நாட்டியம் நடப்பது போல
    *  காராளர் என்பவர் - உழவர்
    *  ஆழி என்பதன் பொருள் -  மோதிரம்
    *  வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
    *  கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
    *  தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
    *  யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
    *  விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
    *  விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
    *  பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
    *  மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
    *  திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
    *  பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
    *  மதுரை என்பது - இடப் பெயர்
    *  மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது -  தெற்குகோபுரம்
    *  பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது -  முத்து
    *  மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் -  செல்லத்தம்மன் கோயில்
    *  நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
    *  மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
    *  மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்
    *  பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு
    *  மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி
    *  மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்
    *  மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891
    *  சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19
    *  முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
    *  இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்
    *  நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் -   பம்மல் சம்பந்தனார்
    *  மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்
    *  தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி
    *  தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி
    *  உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15
    *  உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது -  கலீலியோ
    *  "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்
    *  உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை
    *  ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து
    *  திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430
    *  திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்
    *  உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு
    *  நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.12
    *  அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18
    *  தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன  -   புராணக்கதைகள்
    *  குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்
    *  ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்
    *  மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் -  மகோந்திரவர்ம பல்லவன்
    *  மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் -  கி.பி. 7
    *  நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்
    *  தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்
    *  கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது -  அடியார்க்கு நல்லார்
    *  நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்
    *  மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க
    *  திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி
    *  அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு
    *  நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர்  -  72
    *  சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10
    *  அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது  -   முதுமொழிக்காஞ்சி
    *  முதுமொழிக் காஞ்சியில் உள்ள  பாடல்களின் எண்ணிக்கை - 100
    *  மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
    *  நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் -  மோசிக்கீரனார்
    *  முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10
    *  முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
    *  கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை
    *   மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815
    *  வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
    *  "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்
    *  "பால் பற்றி செல்லா விடுதலும்"  என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி
    *  காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்
    *  சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்
    *  ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்
    *  ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு - இங்கிலாந்து
    *  ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் -   0
    *  ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
    *  பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம்  -   சென்னை
    *  ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு - 1919
    *  கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு - 1887
    *  கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு
    *  ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில்வுட்
    *  ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் -  ஹார்டி
    *  ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் -   ஈ.டி.பெல்

    *  மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை - அரை மாத்திரை
    *  ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு - மாத்திரை என்னும் பெயர்
    *  திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
    *  தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
    *  ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது - முன்னிலை இடம்
    *  இடம் எத்தனை வகைப்படும் - 3 வகை
    *  மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு -  இடம் என்று பெயர்
    *  ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் -  பன்மை
    *  பல பொருள்களை குறிக்கும் சொல் - பலவின்பால்
    *  பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது - பலர்பால்
    *  ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை - உயர்திணைக்கு உரியவை
    *  எண் எத்தனை வகைப்படும் - இரண்டு
    *  ஒரே பொருளை குறிக்கும் சொல் - ஒருமை
    *  மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு -  உயர்திணை
    *  அளபெடை எத்தனை வகைப்படும் - 2 வகை
    *  செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு  உயிரளபெடை என்று பெயர்
    *  திணை என்பது - ஒழுக்கம்
    *  சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ
    *  சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து - ஏ
    *  சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் - ஆ, ஓ, ஏ
    *  சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் -  எ, யா, ஏ
    *  வினா எழுத்துக்கள் - 5
    *  சுட்டெழுத்துக்கள் - 3
    *  பால் - 5
    *  பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
    *  ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது - சுட்டு
    *  பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும்  5 பால்களாக பிரிக்கலாம்
    *  திணை - 2 வகை
    *  நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
     *  ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது - செய்யுள் வழக்கு
    *  மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் -    அஃறிணை

    உவமையால் விளக்கப்படும் பொருள்
    *  தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
    *  இலைமறை காய் போல் - மறைபொருள்
    *  மழைமுகம் காணாப் பயிர் போல -  வாட்டம்
    *  விழலுக்கு இறைத்த நீர் போல  - பயனற்றது
    *  சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல   -  மிக்க மகிழ்வு
    *  உடுக்கை இழந்தவன் கை போல  - நட்புக்கு உதவுபவன்
    *  மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல  - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
    *  இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
    *  குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
    *  வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
    *  வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
    *  புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது  - சான்றாண்மை
    *  சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
    *  அனலில் விழுந்த புழுப்போல    -    தவிர்ப்பு
    *  கண்ணைக் காக்கும் இமை போல  -  பாதுகாப்பு
    *  நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை  -  நிலையாமை
    *  உமி குற்றிக் கைவருந்தல் போல  -     பயனற்ற செயல்
    *  பல துளி பெருவெள்ளம் -  சேமிப்பு
    *  நத்தைக்குள் முத்துப் போல -  மேன்மை
    *  ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
    *  பூவோடு சேர்ந்த நார் போல -  உயர்வு
    *  நாண் அறுந்த வில் போல -  பயனின்மை
    *  மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
    *  தாயைக் கம்ட சேயைப் போல   -   மகிழ்ச்சி
    *  சிறகு இழந்த பறவை போல  -  கொடுமை
    *  மழை காணாப் பயிர் போல  - வறட்சி
    *  நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்
    *  இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி
    *  திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  பெரியபுராணம்
    *  இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
    *  வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்
    *  விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்

    பொருத்துக
    *  வாரி - கடல்
    *  கலிங்கம் - ஆடை
    *  வயமா - குதிரை
    *  புலம் - அறிவு
    *  ஐயை - தாய்
    *  செறிவு - அடக்கம்
    *  இகல் - பகை
    *  நகம் - மலை
    *  வெச்சி - நிரை கவர்தல்
    *  கரந்தை - நிரை மீட்டல்
    *  நொச்சி - எயில் காத்தல்
    *  வாகை - போரில் வெற்றி
    *  வாள் - உயர்ந்த
    *  பராவி - வணங்கி
    *  கழனி -  வயல்
    *  தொன்மை -   பழமை
    *  பரி - குதிரை
    *  அரி - சிங்கம்
    *  மறி - ஆடு
    *  கரி - யானை
    *  பாரி -கபிலர்
    *  அதியமான் - ஒளவையார்
    *  கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
    *  குமணன் -பெருஞ்சித்தனார்
    *  சுரத்தல் - பெய்தல்
    *  உள்ளம் - ஊக்கம்
    *  வேலை - கடல்
    *  நல்குரவு - வறுமை

    *  முப்பால் - திருக்குறள்
    *  தொல்காப்பியம் - தொல்காப்பியர்
    *  மகாபாரதம் -  வியாசர்
    *  தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்
    *  யாப்பருங்கலம் - புத்தமித்திரர்
    *  வீரசோழியம் -  அமிர்தசாகரர்
    *  நேமிநாதம் -  குணவீர பண்டிதர்
    *  நன்னூல்  - பவணந்தி முனிவர்
    *  உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு
    *  முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
    *  ஈரடி வெண்பா  -  திருக்குறள்
    *  தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
    *  திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
    *  இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்
    *  கவிக்குயில் - சரோஜினிநாயுடு
    *  காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி
    *  புதுவைக்குயில் - பாரதிதாசன்
    *  யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி
    *  நம்மாழ்வார் - திருவாய்மொழி
    *  சமணமுனிவர் - திருப்பாமாலை
    *  கண்ணதாசன் - இயேசுகாவியம்
    *  உமறுப்புலவர் - சீறாப்புரணம்
    *  பாணாறு - பெரும்பாணாற்றுப் படை
    *  புறம்பு நானுறு - புறநானூறு
    *  திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்
    *  வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை
    *  வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்
    *  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்
    *  மருள் நீக்கியார் - அப்பர்
    *  கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை
    *  முடியரசன் - பூங்கொடி
    *  சிற்பி - நிலவுப்பூ
    *  நா.காமராசன் - சூரியகாந்தி
    *  பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு
    *  பாஞ்சாலி சபதம் - பாரதியார்
    *  பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
    *  அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்
    *  கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
    *  திருவாசகம் - மாணிக்கவாசகர்
    *  திருப்பாவை - ஆண்டாள்
    *  பெண்ணின் பெருமை - திரு.வி.க.
    *  தேவாரம் - திருஞானசம்பந்தர்
    *  முக்குடற்பள்ளு -  ஆசிரியர் பெயர் தெரியவில்லை
    *  பழமொழி - முன்றுறையரையனார்
    *  இருண்ட வீடு - பாரதிதாசன்
    *  ஏலாதி - கணிமேதாவியார்.

    No comments: